News January 24, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26ம் தேதி ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். 2024-25 ஆம் ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

Similar News

News December 3, 2025

விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

image

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.

News December 3, 2025

விழுப்புரம்: மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலி

image

டி.புதுப்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி தங்கமணி. இவருக்கு மனைவி மற்றும் 5 மாத பெண் குழந்தை உள்ளனர். இவர், நேற்று காலையில் குளித்து முடித்து, கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த தனது உடையை எடுத்துள்ளார். அப்போது, மின்சார வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, இரும்புக் கம்பியில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!