News March 6, 2025
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்புகள்

கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
Similar News
News March 8, 2025
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழ வியாபாரி பலி

காங்கயம் – கோவை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (65). இவர் தாராபுரம் சாலையில் தர்பூசணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தாராபுரம் ரோட்டில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 8, 2025
திருப்பூரில் ரூ.99 லட்சம் பரிசு அறிவிப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் ரூ.99 லட்சம் பரிசு வழங்கப்படும் என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
News March 8, 2025
திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

இந்துக்கள் கோயில் கட்ட ஜமாத் அமைப்பினர், ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்டுவதற்கு, தானமாக நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள், குடமுழுக்கு விழாவிற்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.