News March 29, 2024
அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஒசூரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் அனுமதியின்றி அவா் கூட்டம் நடத்தியதாக பறக்கும் படைப்பிரிவு அதிகாரி விஜயா சாமுண்டீஸ்வரி ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் உள்பட 400 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Similar News
News September 15, 2025
கிருஷ்ணகிரியில் ‘காவு வாங்கும் இடம்’; அச்சத்தில் மக்கள்

ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், சானமாவு வனப்பகுதியில் பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. ‘காவு வாங்கும் இடம்’ எனப் பெயரெடுத்துள்ள இந்தச் சாலையில், உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. விரைந்து பணியை முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 15, 2025
தாமதமாகும் சாலைப் பணி: 200 விபத்துகள்

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சானமாவு வனப்பகுதியில் பாலம் கட்டும் பணி, கடந்த இரண்டு மாதங்களாகத் தாமதமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட விபத்துகள் இங்கு நடந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள், இந்த இடத்தை ‘காவு வாங்கும் இடம்’ எனக் குறிப்பிட்டு, அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
News September 14, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செ.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க