News February 24, 2025
அனுமதியின்றி கல்குவாரி – 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்

நாமக்கல், கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கரடு புறம்போக்கில் அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதில் 23 வாகனங்கள் பறிமுதல் செய்தும், ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிறகு அனுமதியின்றி கல்குவாரி இயக்கிய விவகாரத்தில் அரசுக்கு தகவல் தெரிவிக்காத நாமக்கல் ஆர்டிஓ உட்பட இரண்டு விஏஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Similar News
News July 11, 2025
நாமக்கல்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

➡️ நாமக்கல் மாவட்டத்தில் நாளை 36,436 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
News July 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், பழனி வழியாக தினசரி இயங்கும் 22651 சென்னை சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு ரயில், இன்று (11.07.2025) முதல் 15 நிமிடங்கள் முன்னதாக பாலக்காடு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், ஜோலார்பேட்டை, சேலம், இராசிபுரம் வழியாக அதிகாலை 3:34 மணிக்கு நாமக்கல் வந்து அதிகாலை 3:35 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. SHARE பண்ணுங்க!