News January 22, 2025
அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பக்தர்களுக்கு உணவு வழங்க முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கிய பிறகு இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
திண்டுக்கல் மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

1).திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084. 2).காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. 3).திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 0451 – 2432578. 4).மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 0451-2460050. 5).மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 6).மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868. 7).மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News December 21, 2025
JUSTIN: திண்டுக்கல்லில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர் அப்பகுதி ஹோட்டலில் பணியாற்றியவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 21, 2025
திண்டுக்கல் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

திண்டுக்கல் மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


