News January 22, 2025
அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம்!

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பது துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், பக்தர்களுக்கு உணவு வழங்க முறையாக அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்கிய பிறகு இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.
News December 12, 2025
பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.
News December 12, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய அட்டை கோரிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.


