News March 7, 2025

அனிதா ராதாகிருஷ்ணனின் நாளைய நிகழ்ச்சிகள்

image

மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.07) பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணியளவில் திருச்செந்தூர் தெய்வா திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, 11 மணிக்கு நா.முத்தையாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை திறப்பு, 11.30 க்கு உடன்குடியில் சமுதாய வளைகாப்பிலும் பங்கேற்கிறார்.

Similar News

News March 9, 2025

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றம்- ரூ-6 கோடிக்கு தீர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மொத்தம் 13 அமர்வுகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. மாவட்ட நீதிபதி வசந்தி தலைமையில் நடைபெற்ற இதில் மொத்தம் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக மொத்தம் ரூபாய் 6 கோடியே 62 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.

News March 9, 2025

தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீதுகடும் நடவடிக்கை 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News March 9, 2025

80 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற சிறிய ரக கப்பலில் ரூ.80 கோடி மதிப்புள்ள 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் மற்றும் குற்ற புலனாய்வுத்துறையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து , 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!