News March 21, 2024
அந்தியோதயா நெல்லையிலிருந்து இயக்கம்

நாகர்கோவிலில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை சிக்னல் பணிகள் காரணமாக நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படுகிறது. அதன்படி இந்த ரயில் இன்று (மார்ச் 21) முதல் வரும் 27ஆம் தேதி வரை 6 நாட்கள் நெல்லையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே நேற்று (மார்ச் 20) இரவில் தெரிவித்துள்ளது.
Similar News
News September 16, 2025
நெல்லை: விபத்தில் வாலிபர் பலி

நெல்லை, நாங்குநேரி அருகே வடக்கு புளியங்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி நண்பர்கள் இருவருடன் பைக்கில் மேலப்பாளையம் ஆமீன் புறம் 7வது தெரு அருகே சென்றார். அப்போது பைக்கும் லோடு ஆட்டோவும் மோதின. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மந்திரமூர்த்தி உயிரிழந்தார். விபத்துக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.
News September 16, 2025
விரைவில் நெல்லை வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நெல்லையில் அக்டோபர் 11ஆம் தேதி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.நெல்லை டவுன், வாகையடி முனை, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரத்தில் விஜய் பேசுவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், மரிய ஜான், ராஜகோபால், ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
News September 16, 2025
நெல்லை உங்களுடன் ஸ்டாலின் முகாம் – கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை வி.எம் சத்திரம் சண்முக மஹால், வள்ளியூர் எம்.எஸ்.மஹால், கோடீஸ்வரன் நகர் ஜெயம் மஹால், இட்ட மொழி பெருமாள் தங்கவேல் ஜெயராஜ் மண்டபம், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி சமுதாயம் நலக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.