News August 9, 2024
அந்தியூர் குருநாதசாமி கோயிலில் Ex அமைச்சர்கள் தரிசனம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் பண்டிகை, ஏழாம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் உட்பட அதிமுகவினர் பலர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின் மாட்டுச்சந்தை குதிரைச் சந்தையை பார்த்துச் சென்றனர்.
Similar News
News November 28, 2025
ஈரோட்டில் கொடூர கொலை சம்பவம்!

ஈரோடு சூளை எல்விஆர் காலனியை சேர்ந்தவர் கமலம் 60. இவருடைய மகன் புதுச்சேரியில் வேலை செய்வதால் கமலம் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கமலம் பிணமாக கிடந்தார். மேலும் ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் கமலத்தை கொன்று 5 பவுன் நகையை கொள்ளை அடித்தது தெரியவந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைப்பு.
News November 28, 2025
கோபியில் களம் இறங்கும் ஈபிஎஸ்!

கோபிசெட்டிபாளையம் MLAவாக இருந்த செங்கோட்டையன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சூழலில், அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து, பின்னர் நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைத்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 28, 2025
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

பெருந்துறை துடுப்பதி சாணார்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன் (28). எலக்ட்ரீசியன். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் காணப்பட்டார். தன்னுடன் பழகியவர்களிடம் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தமிழரசன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெருந்துறை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


