News August 9, 2024

அந்தியூர் குருநாதசாமி கோயிலில் Ex அமைச்சர்கள் தரிசனம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் பண்டிகை, ஏழாம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் உட்பட அதிமுகவினர் பலர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின் மாட்டுச்சந்தை குதிரைச் சந்தையை பார்த்துச் சென்றனர்.

Similar News

News October 15, 2025

சென்னிமலையில் மீண்டும் தெரு நாய் அட்டகாசம்

image

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பாரை கிராம ஊராட்சி உட்பட்ட இச்சிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சார்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன், 14 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முந்தினம் இரவு வெறிநாய்கள், பட்டியில் மூங்கில் தப்பையை கடித்து உள்ளே புகுந்து, ஆறு ஆடுகளை கடித்ததில், இரண்டு ஆடுகள் இறந்து விட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்து விட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

News October 14, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

image

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

error: Content is protected !!