News August 14, 2024
அந்தியூருக்கு 7 லட்சம் பேர் வருகை

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் பண்டிகை கடந்த 7ஆம் துவங்கி 10ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த பண்டிகைக்கு 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுச்சந்தை குதிரைச்சந்தை காணவும் சாமி தரிசனம் செய்யவும் வருகை புரிந்துள்ளனர். 4 இடங்களில் பொழுதுபோக்கு, ராட்டினம், சாகசம், குழந்தைகள் விளையாட்டு என அமைக்கப்பட்டிருந்தது.
Similar News
News November 20, 2025
ஈரோடு வருகை தந்த உலககோப்பை!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வெற்றி கோப்பை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டிக்கு வருகை தந்த உலக கோப்பைக்கு துணை ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோப்பை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
News November 20, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
ஈரோடு : ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர்.இந்த சிக்கலை தீர்க்க <


