News August 16, 2024

அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

image

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

தஞ்சாவூர்: ரூ.29,000 சம்பளம்.. மத்திய அரசு வேலை!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>.
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

தஞ்சை: சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி பலி

image

நரசிங்கன்பேட்டையில் இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து திருக்கடையூர் சென்ற கார் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுப்பிரமணியன் இவரது மனைவி கலாவதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் திருக்கடையூரில் 60ம் கல்யாணம் நடைபெற இருந்த நிலையில் இருவரும் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 17, 2025

தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!