News August 16, 2024
அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
தஞ்சாவூர்: தோஷங்களுக்கு தீர்வு கொடுக்கும் கோயில்!

தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை ஆஞ்சநேயர் பற்றி தெரியுமா? படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள் போற்றவற்றிக்கு, மூலை அனுமாரை மூல நட்சத்திரத்தில் 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கும். மார்கழியில் 108 முறை வலம் வந்து மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது மக்களின் ஐதீகம். SHARE IT.
News September 15, 2025
மருத்துவமனையில் ஆய்வு ஆட்சியர் மற்றும் எஸ்பி

தஞ்சாவூரில் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து, சிகிச்சை பெறவரும் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.