News August 16, 2024
அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தஞ்சை: 327 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார் அடங்கிய 327 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News December 1, 2025
தஞ்சாவூர்: BIKE வைத்திருப்போர் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த<
News December 1, 2025
தஞ்சை : ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


