News August 16, 2024
அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
தஞ்சை: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, தஞ்சை மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
தஞ்சை: 12 மாடுகள் அடிபட்டு பலி!

தஞ்சை வரை புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 12 மாடுகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளன. தீபாவளி அன்று ஒரே நாளில் 7 மாடுகளும், நேற்று முன் தினம் 3 மாடுகளும் பலியாகின. நேற்று 2 மாடுகள் காயம் அடைந்து கிடப்பதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் டாக்டர்கள் நேரில் சென்று மாடுகளுக்கு மருத்துவம் செய்தனர். சாலையில் மாடுகள் அடிபடுவதை தடுக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதை கோரிக்கையாக உள்ளது
News November 27, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள நவ 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளர் உதவி மையங்கள் நடைபெறவுள்ளன. இதில், தற்காலிகமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தங்களது பழைய வாக்கு சாவடிக்கு சென்று கணக்கெடுப்பு படிவங்கள் பெற்று நிறைவு செய்து உடனடியாக வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


