News August 16, 2024
அதிராம்பட்டினம் அருகே 13 வயது மாணவன் பலி

அதிராம்பட்டினம் அருகே உள்ள செங்கப்படுத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் வீரசக்தி (13). 8-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று தனது உறவினரான சக்தி முருகன் (13) என்ற மற்றொரு சிறுவனுடன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக குளத்தில் இருந்த சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
தஞ்சை: ஆற்றில் சடலமாக மிதந்த உடல்!

கல்லணை அருகே பாதிரகுடி வெண்ணாறு நடுக்கரை திட்டில் கவிழ்ந்த நிலையில் ஒரு பிரேதம் கிடப்பதாக தோகூர் விஏஓவுக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விஏஓ கிருத்திகா இது குறித்து தோகூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டபோது இறந்தவருக்கு 40 வயது இருக்கலாம் – அவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
தஞ்சை கலெக்டர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று (நவ.27) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


