News March 28, 2024
அதிமுக பாஜக காங்கிரஸ் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ( மார்ச் 28 ) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பரிசீலனையில் ஈடுபட்டனர். ஒரு வழியாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
Similar News
News September 18, 2025
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர்கள் இன்று காலை ஒருவரை ஒருவர் தாக்கி கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்த நிலையில் மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் மாணவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதி விவசாயிகளும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.