News March 26, 2025
அதிமுக நிர்வாகிகள் 6 பேர் ராஜினாமா கடிதம்

திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Similar News
News December 2, 2025
நெல்லை: 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 2, 2025
நெல்லை: உச்சம் தொட்ட முருங்கைகாய் விலை

தொடர் மழையின் காரணமாக நெல்லையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. மழையின் காரணமாகவும் முருங்கைக்காயின் வரத்து குறைவு காரணமாகவும் முருங்கைக்காயின் விலை உச்சம் அடைந்துள்ளது. நெல்லை உழவர் சந்தைகளில் கிலோ 310 ரூபாய்க்கு விற்பனையாகிறது வெளிச்சந்தைகளில் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காயின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
News December 2, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 47). இவரது மனைவி சந்திரா (42). இவர்கள் மீனாட்சிபுரத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் சமாதானபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுப்பையா லேசான காயத்துடன் தப்பினார். விபத்துக்குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


