News March 26, 2025
அதிமுக நிர்வாகிகள் 6 பேர் ராஜினாமா கடிதம்

திசையன்விளையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான 6 கடைகளை பகிரங்க ஏலம் விடாமல் அதிமுக திசையன்விளை பேரூராட்சி செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான ஜெயக்குமார், திமுக நகர செயலாளர் சேர்ந்து ஏலம் எடுத்துக் கொண்டனர். இதனால் மக்களிடத்தில் பதில் சொல்ல முடியாமல் கிளைச் செயலாளர்கள் 6 பேர் நேற்று ராஜினாமா செய்து எடப்பாடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Similar News
News September 19, 2025
நெல்லை: அதிகாலையில் மனைவி வெட்டிக் கொலை

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். கொலை செய்யப்பட்ட கங்கைகொண்டான் ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரதிகா (20) உடலை கைப்பற்றி நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த கணவன் அன்புராஜை (24) சந்திப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 19, 2025
நெல்லை மாநகராட்சி பகுதிக்குள் செல்ல தடை!

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனைச் சந்தை வரும் 22ம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
News September 19, 2025
நெல்லையில் ரூ.10 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

தென் மாவட்ட போலீசார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடியான செயல்பாட்டை காட்டியுள்ளனர். நாங்குநேரி அருகே பொத்தையடி பகுதியில் உள்ள தனியார் எரியூட்டு நிறுவனத்தில், ரூ.10 கோடி மதிப்புடைய 2,000 கிலோ கஞ்சாவை எரித்து அழித்தனர். இந்த நடவடிக்கை, போலீசாரின் தீவிர கண்காணிப்பின் விளைவாக நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களில், போலீசார் மொத்தம் 3,000 கிலோ கஞ்சாவை தீக்கிரையாக்கியுள்ளனர்.