News December 31, 2024
அதிமுக கவுன்சிலர் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சியின் மன்ற கூட்டம் நேற்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரபாகரனை இரு கூட்டங்களில் பங்கேற்க தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டது.
Similar News
News November 19, 2025
கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
News November 19, 2025
கோவையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு!

கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிக்கையை திருப்பி அனுப்பிய மத்திய அரசையும் கோவைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
News November 19, 2025
கோவையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (நவ.19)காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 118 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.


