News March 25, 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

image

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

தி.மலை : B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தி.மலை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 7, 2025

தி.மலை: தந்தை பெரியார் விருது பெற இவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம். வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

தி.மலை : ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

error: Content is protected !!