News March 25, 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

image

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

தி.மலை: தீராத நோய் எல்லாம் தீர இங்கு போங்க!

image

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News September 18, 2025

தி.மலை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

தி.மலை மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

தி.மலை: லாரி மோதி நடிகர் பலி!

image

தி.மலை, செய்யாறு, பல்லி கிராமத்தைச் சோ்ந்த நாடக நடிகா் ரஞ்சித்குமாா் (46) இவா் தனது நண்பரான சின்னப்பையனுடன் நேற்று (செப்.17) பைக்கில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தாா். மாமண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாடக நடிகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!