News March 25, 2025
அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
தி.மலை: கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:
1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 5, 2025
தி.மலை: பைக் மோதி விவசாயி பலி!

தி. மலை: வாணாபுரம் அருகே சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் மக்காச்சோளத்தை உலர்த்திக்கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில் வெங்கடேசன், அவரது உறவினர் அன்பரசு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், வெங்கடேசன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
News November 5, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.04) இரவு முதல் இன்று (நவ.5) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.


