News March 25, 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

image

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 19, 2025

தி.மலை: தீபத்தன்று மலையேற அனுமதி உண்டா?

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கார்த்தை தீபத் திருநாளன்று மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கார்த்தை தீபத் திருநாளை ஓட்டி முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

News November 19, 2025

தி.மலை: தலை நசுங்கி இளைஞர் பலி!

image

ஆரணி வட்டம், அரியப்பாடி, ஆரணி- சிறுமூர் சாலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சிறுமூர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்ராபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (16) என்பவர் ஒட்டி வந்த பைக், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!