News April 9, 2025
அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News October 31, 2025
சென்னை: இனிப்பு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்!

ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). வழக்கறிஞரான இவர் கடந்த 28ம் தேதி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில், இனிப்பு வாங்கி குடும்பத்துடன் சாப்பிட்ட போது, சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மண்கண்டன் நேற்று, கடையில் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் விசாரிக்கின்றனர்.
News October 31, 2025
சென்னை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
சென்னை ஐ.ஐ.டி அசத்தல்

விமானத் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்காக மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் விமானம், வான்வழி வாகனத்தின் செங்குத்து புறப்பாடு – தரையிறக்கத்துக்கான ஹைப்ரிட் ராக்கெட் உந்துவிசையை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னேற்றம் கண்டுள்ளது. செங்குத்தாக புறப்படச் செய்வது, தரையிறங்கச் செய்வது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.


