News December 31, 2024

அண்ணா மிதிவண்டி போட்டிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் வைத்து வருகின்ற ஜனவரி 4 அன்று காலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாவது பரிசு ரூ3000 மூன்றாவது பரிசு ரூ.2000 என அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள விரும்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்வதற்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.

Similar News

News November 28, 2025

நெல்லை அரசு அலுவலகத்தில் வேலை ரெடி

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 6 வகையான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். என்றும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News November 28, 2025

நெல்லை: 8 மாதத்திற்கு பின் கொலையாளி கைது

image

திருநெல்வேலி, முக்கூடல் பாப்பாக்குடி சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் தடுக்கி விழுந்து இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் பிணக்கூறாய்வு அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யபட்டது. வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை 8 மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கொலையாளி சுரேஷ் (29) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

News November 28, 2025

நெல்லை மாவட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கவனத்திற்கு!

image

2025 – 26ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பாளை வட்டார வள மையம் சார்பில் கிறிஸ்துராஜா மேல்நிலை பள்ளியில் 2ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் 0 – 18 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மருத்துவ உதவி உபகரணங்கள் அளவீடு பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்ட நலத் திட்டங்களைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

error: Content is protected !!