News August 26, 2024

அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

image

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 24, 2025

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

image

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான நத்தம் விஸ்வநாதன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News November 24, 2025

BREAKING: சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

சென்னையில் வரும் 29ஆம் தேதி கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நவ.29ஆம் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே!. ஷேர் பண்ணுங்க.

News November 24, 2025

சென்னையில் இது கட்டாயம்: மீறினால் ₹500 அபராதம்!

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் செல்லப்பிராணி நாய்களை அழைத்து வரும்போது சங்கிலி மற்றும் வாய் கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களிடம் இன்று முதல் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாய் கடியைத் தடுக்கவும் 115 சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!