News August 26, 2024

அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

image

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 24, 2025

சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

image

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News November 24, 2025

JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

image

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.

News November 24, 2025

JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

image

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.

error: Content is protected !!