News August 26, 2024
அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 17, 2025
சென்னையில் பிரபல நடிகர் வீட்டிற்கு வந்த மிரட்டல்

திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் இன்று (நவ-17) காலை வந்த தகவலை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அவரது வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சென்னையில் எவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 17, 2025
சென்னை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

சென்னை: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
சென்னை: கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி பலி

ஆவடியை சேர்ந்த கோனாம்பேடு, ரெட்டிபாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜா- திவ்யா தம்பதி. ராஜா புதிதாக கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு காரை பார்க்கிங் செய்ய வீட்டின் பின் புறம் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கணவர் ராஜா பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியாதல் திவ்யா மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


