News August 26, 2024
அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு

தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்குள், மர்ம நபர் ஒருவர் பீர் பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காவலர்கள், அவரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கண்ணகி நகரைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பதும், டாஸ்மாக் கடையால் குடும்பங்கள் சீரழிவதால் தான் இப்படி செய்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 20, 2025
சென்னையில் ‘டீ’ குடிக்கச் சென்ற பெண்ணுக்கு கொடூரம்!

சென்னை மாதவரத்தில் 31 வயது டெலிவரி செய்யும் பெண் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் தோளைத் தொட்டு, மோசஸ் (எ) அப்பு (25) என்பவர் ஆபாசச் சைகை செய்ததோடு அவரை திட்டி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மோசஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ள அவர் BNS சட்டத்தின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 20, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
இரவு நேர ரயில் சேவை; மீண்டும் தொடங்க கோரிக்கை

சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு ரயில் பாதைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இரவு நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ரத்து நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


