News January 2, 2025

அண்ணாதுரை பிறந்தநாள்: சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி தொடக்கம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி அன்று காலை துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜன.2) அறிவித்து உள்ளது.மேலும், இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறப்பட்ட வயது சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

விழுப்புரம்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனித உடல்!

image

விழுப்புரம்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் (52), 7 ஆண்டுகளாக சின்னகோட்டக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இவரது மனைவி அச்லா, இவரை 4 நாட்களாக தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, அலெக்சாண்டர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

விழுப்புரம்: அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பு!

image

விழுப்புரம் வட்டம், பரசு ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா, சேர்ந்தனூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர், புதன்கிழமை சேர்ந்தனூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த, சிவமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 21, 2025

விழுப்புரம்: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை!

image

விழுப்புரம்: ஓமிப்பேரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், இவரது மனைவி ராகசுதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாலமுருகன், பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் நேற்று (நவ.20) வழக்குப் பதிந்தனர்.

error: Content is protected !!