News January 2, 2025
அண்ணாதுரை பிறந்தநாள்: சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி வரும் 4ம் தேதி அன்று காலை துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜன.2) அறிவித்து உள்ளது.மேலும், இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறப்பட்ட வயது சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
விற்பனைக்காக வலி நிவாரணி (போதை) மாத்திரைகள் வைத்திருந்தவர் கைது

தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமேடு பொன்னியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவர அவரது பெயர் ஜெய்கணேஷ் என தெரிய வந்தது தாலுகா போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து தாலுகா போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
News November 23, 2025
விழுப்புரம்: வேலைக்கு செல்லாத கணவன் – மனைவி தற்கொலை!

விழுப்புரம்: கோணை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி புவனேஸ்வரி (32). நாகராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியில் புவனேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 22, 2025
கண்டாச்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் 76 திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


