News October 25, 2024

அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை

image

ஓசூர் அருகே அணையிலிருந்து வெளியேறிய ரசாயன நுரை, தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்ததால், அதனை அகற்ற முடியாமல் திரும்பிய தீயணைப்புத் துறையினர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று ரசாயன நுரை குறைந்ததை அடுத்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

Similar News

News September 18, 2025

ஓசூர் அருகே நாட்டு வெடி விபத்தில் சிக்கிய 4 பேர்

image

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (40) தனது மாட்டுக்கொட்டகையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி பறந்து நாட்டு வெடிகுண்டுகள் மீது விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா (36), மகன் சரண் (13), உறவினர் ஹரிஷ் (30) என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறது

News September 18, 2025

ஓசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

image

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்துக் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒசூரில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றவும், வணிக மையம் அமைக்கவும், கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை இரயில்வே திட்டத்தை நிறைவேற்றவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

News September 18, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!