News August 14, 2024
அணைக்கட்டு விவசாயிகள் நிலத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என அதிகாரிகள் கூறியதால், நிலத்தில் இறங்கி நெற் பயிர்களை கட்டி அணைத்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 27, 2025
வேலூர்: திடீரென தீப்பற்றி எரிந்த கார்.. பரபரப்பு!

வேலூர், குடியாத்தம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த கார் நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
வேலூரில் இருந்து 100 போலீசார் பயணம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100 போலீசார் நேற்று (நவ.26) திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். தீபத்திருவிழா முடிந்த பின்னர் 4-ந்தேதி அவர்கள் வேலூருக்கு திரும்பி வர உள்ளனர் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 27, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!


