News August 14, 2024

அணைக்கட்டு விவசாயிகள் நிலத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கட்டு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில் முதியோர் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடையாது என அதிகாரிகள் கூறியதால், நிலத்தில் இறங்கி நெற் பயிர்களை கட்டி அணைத்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News November 16, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*

News November 15, 2025

பென்னாத்தூர்: வாக்காளர் படிவங்கள் திரும்ப பெரும் பணி

image

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பென்னாத்தூர் பேரூராட்சி கேசவபுரம் பள்ளிதெருவில் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகளை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News November 15, 2025

தனியார் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

image

காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (நவ.15 ) தொடங்கி வைத்தார்.தேர்வான வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, தனியார் பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!