News August 2, 2024
அணைகளுக்கு நீர்வரத்து கடும் சரிவு

தென்காசி மாவட்டத்தில் மழை காணப்படாததால் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 44 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 66 கன அடியாகவும், கருப்பாநதி அணைக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு 50 கன அடியாகவும், கடனா நதிக்கு 52 கன அடியாகவும் நீர் வரத்தானது கடுமையாக சரிந்துள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜா (29). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் செங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தனியாக இருந்த காளிராஜ் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 17, 2025
தென்காசி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட உரிமை கோரப்படாத 133 மோட்டார் வாகனங்கள் 18.12.25 அன்று பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம்விடப்பட உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் 17.12.25 மாலை 4 மணிக்குள் ரூ.3,000/- கட்டி டோக்கன் பெற்றுச் செல்லும்படி தென்காசி மாவட்ட காவல்துறையால் அறிவுறுத்தப்படுகிறது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 17, 2025
தென்காசி: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை! APPLY

தென்காசி மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <


