News November 25, 2024

அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு

image

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளான 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர், 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர், 52 அடி முழு கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் இருந்து வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீர் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று(நவ.25) தெரிவித்துள்ளது.

Similar News

News October 27, 2025

நெல்லையில் இருவர் மீது குண்டர்

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஜாபர் சாதிக் (20), நெல்லை அருகன்குளத்தை சேர்ந்த கந்தசாமி என்ற கார்த்திக் (21) ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 27, 2025

நெல்லையப்பர் கோயில் கந்த சஷ்டி விழா 5ஆம் நாள் பூஜை

image

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் திருநாளில் இன்று சுவாமி ஆறுமுகர் மற்றும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News October 27, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தங்கள் வார்டு பகுதியில் எப்போது நடைபெறுகிறது என்பதை அந்த பகுதி கவுன்சிலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தங்கள் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் செய்ய வேண்டிய பணி குறித்து தெரிவிக்கலாம்.

error: Content is protected !!