News March 28, 2025

அணிவகுத்து நிற்கும் கனரக லாரிகள்

image

தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் அரசின் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரியில் செல்லும் வழியில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரயிலுக்காக மூடப்படும் போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அணிவகுத்து வரிசையாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

தென்காசி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ராஜ நயினார் (28). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாப்பாகுடி இன்ஸ்பெக்டர் பரத் லிங்கம் வேண்டுகோளின் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி ராஜ நயினார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 20, 2025

தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!