News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், திருவள்ளூரில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News December 23, 2025
திருவள்ளூர் மக்களே…, இந்த எண்கள் முக்கியம்!

திருவள்ளூர் மாவட்ட பதிவுத்துறை எண்கள்:
மாவட்ட பதிவாளர்:044-27222674
சார்பதிவாளர், திருத்தணி:044-27881504
சார்பதிவாளர், திருவள்ளூர்:044-27872109
சார்பதிவாளர், பள்ளிப்பட்டு:044-27843480
சார்பதிவாளர், பேரம்பாக்கம்:044-27655200
சார்பதிவாளர், ஊத்துக்கோட்டை:044-27631361
சார்பதிவாளர், இரா.கி.பேட்டை:044-27845131
சார்பதிவாளர், மணவாளநகர்:044-27641352
சார்பதிவாளர், பூவிருந்தவல்லி:044-26494966
News December 23, 2025
திருவள்ளூரில் பரபரப்பு.., வாலிபருக்கு அரிவாள் வெட்டு!

ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(33). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முந்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து உதயகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதனால், படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News December 23, 2025
திருவள்ளூர்: கடன் தொல்லையால் தற்கொலை!

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலயோகி நகரில் வசித்து வந்தவர் சிவரஞ்சன்(44). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த நவ.24ஆம் தேதி கடன் தொல்லையால் வீட்டில் இருந்து மாயமான அவர், பெருமாஞ்சேரி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அழுகிய நிலையில் அவரின் உடலைக் கண்டெடுத்த போலீசார் விசாரிக்கின்றனர்.


