News April 30, 2025
அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News December 3, 2025
கடலூர்: பெரியார் விருது – ஆட்சியர் அறிவிப்பு!

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்டசிறுபான்மையினர் அலுவலகத்தில் 18.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவிந்துள்ளார்.
News December 3, 2025
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்து சேர்ந்தவர் வேலு(23), இவர் 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அச்சிறுமி கர்ப்பமானாதல் துகுறித்து மேல் புவனகிரி ஊராட்சி ஊர் நல அலுவலர் அருளரசி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
குறிஞ்சிப்பாடி: தீயில் கருகி பெண் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக் குப்பத்தை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி வன்னிய மலர்(37). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது, நைட்டியில் தீப்பட்டு உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த வன்னியமலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


