News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே அரியலூர் மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். தங்கம் மட்டுமில்லை இதையும் வாங்கலாம். SHARE பண்ணுங்க..
Similar News
News November 25, 2025
அரியர்லூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

அரியலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News November 25, 2025
அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வகையில், நேற்று முதல் இன்று காலை வரை அரியலூரில் 19.4 மி.மீ, திருமானூரில் 9 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 20 மி.மீ, செந்துறையில் 18.4 மி.மீ, ஆண்டிமடத்தில் 6 மி.மீ, தா.பழுரில் 3 மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 95.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 25, 2025
அரியலூர்: குழந்தை திருமணம் – போக்சோவில் 88 வழக்குகள் பதிவு

அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடம் இடங்களில் போக்சோ மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் 2025ஆம் ஆண்டு குழந்தை திருமணம் மற்றும் போக்சோவில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


