News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருவாரூர் மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 19, 2025
திருவாரூர் வரும் விஜய்க்கு 26 நிபந்தனைகள்

திருவாரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.20) பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து 26 நிபந்தனைகளுடன் திருவாரூர் போலீசார் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி தவெக தலைவர் விஜய் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும், ரோட் ஷோ நடத்தக்கூடாது என்றும், மீறினால் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்த போலீசாருக்கு முழு அதிகார உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News September 19, 2025
திருவாரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவாரூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
திருவாரூர்: இளம்பெண் பரிதாப பலி

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, சந்திரசேகரபுரத்தை சேர்ந்தவர் சிவகாமி (23). அரசு போட்டித் தேர்வுகளுக்காக தஞ்சையில் பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று தனது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது மணப்படையூர் பைபாஸ் சாலையில் இருவரும் சென்ற டூவீலர் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.