News April 30, 2025

அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

image

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருச்சி மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 15, 2025

திருச்சி: ரூ.1 லட்சத்துடன் விருது – ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உணவு வணிகர்கள் வரும் நவ.25ம் தேதிக்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

திருச்சி: நீதிமன்றத் தடையை மீறினால் கடும் நடவடிக்கை

image

திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், இன்று இரவு நீதிமன்ற அறிவிப்பாணை கொண்ட அறிவிப்பு பலகை தெப்பக்குள சுற்று வட்டார பாதைகளில் மாநகராட்சி அலுவலர்களால் வைக்கப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

News November 15, 2025

திருச்சி: பணம் பிரச்னையில் வாலிபர் அடித்து கொலை

image

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி(38). தொழிலாளியான இவர், மாயமான நிலையில், மணப்பட்டி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட தகறாரில் கருணாநிதியை தாக்கியதில், அவர் உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!