News April 12, 2025
அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும்

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News December 4, 2025
குமரி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

குமரி மாவட்ட மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
குமரி: எரிந்த நிலையில் வாலிபர் சடலம்

கருங்கல் சகாயநகர் ஜெனிஷ்(28)க்கு திருமணமாகி மனைவி அவரை விட்டுப்பிரிந்து சென்று விட்டார். தனியாக வசித்து வந்த ஜெனிஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் நேற்று காலையில் அவரது அறையில் இருந்து புகை வரவே உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீயில் எரிந்த நிலையில் கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கருங்கல் போலீசார் விசாரணை.
News December 4, 2025
குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (டிச.4) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணுங்க.


