News April 12, 2025
அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும்

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News October 18, 2025
குமரியில் தொடர் மழை நான்கு வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் விபரங்கள் செய்த சேகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
News October 18, 2025
BREAKING: குமரி – ஹவுரா ரெயிலில் கூடுதல் ரயில் பெட்டிகள்

தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் வசதிக்காக இன்று(18ம் தேதி) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில் எண் 12665 கன்னியாகுமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். அதுபோல் அக்.20.ல் ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் எண் 12666 ஹவுரா – கன்னியாகுமரி எக்ஸ்பிரசிலும் ஒரு ஸ்லீப்பர் பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
News October 18, 2025
குமரி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

குமரி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..