News April 12, 2025

அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும் 

image

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782  கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

Similar News

News November 22, 2025

குமரி: CSIF வீரர் தற்கொலை

image

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே களியல் சிறுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு படை (CSIF) வீரர் சுனில் ராஜ் (39). இவருக்கும் மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி வீட்டில் சென்று பார்த்த போது சுனில் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 22, 2025

குமரி: அவசர உதவி எண்கள் அறிவித்த கலெக்டர்!

image

குமரி ஆட்சியர் நேற்று கூறியதாவது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டுஅறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி எண்- 1077 மற்றும் 04652 231077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார். SHARE

News November 22, 2025

குமரி: அவசர உதவி எண்கள் அறிவித்த கலெக்டர்!

image

குமரி ஆட்சியர் நேற்று கூறியதாவது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டுஅறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி எண்- 1077 மற்றும் 04652 231077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார். SHARE

error: Content is protected !!