News April 12, 2025
அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும்

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News December 6, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
குமரி: பைக் மீது மோதிய கார்! சம்பவ இடத்திலேயே பலி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ரஞ்சித் தாஸ் அவரது சகோதரி ரம்யா ஆகியோர் டூவீலரில் இன்று வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீதும் மோதியது. இதில் ரஞ்சித்தாஸ், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இதில் ரஞ்சிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.
News December 6, 2025
குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.


