News April 12, 2025
அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும்

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782 கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
Similar News
News November 23, 2025
குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.
News November 23, 2025
குமரி: காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News November 22, 2025
பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரி நீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 44 அடி நீர்மட்டம் உள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து இன்று (நவ.22) 500 கன அடி உபரி நீர் அவசரகால மதகுகள் மூலம் திறந்து விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


