News October 24, 2024
அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக நாளை கோவை, சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது
Similar News
News December 4, 2025
BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாநகரின் மையத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிரதான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலமாக வந்துள்ளது. இதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன், போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 4, 2025
கோவை: ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவிய பிரியா(25). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிய பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
கோவையில் இலவச Data Analytics பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Data Analytics-Google பயிற்சி வழங்கப்படுகிறது. 37 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் Data Analytics -இல் உள்ள Advanced Excel, Advanced SQL, Statistics,Tableau, Power BI ஆகிய அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. டிப்ளமோ முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <


