News April 15, 2024

அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் வேறு மாவட்டத்தில் வாக்குகள் உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், அரசு அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இதனை நாகை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உடனிருந்தனர்.

Similar News

News November 24, 2025

நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை நிலவரம்

image

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம்; நாகை 8.3 செமீ, திருப்பூண்டி 7.6 செமீ, வேளாங்கண்ணி 8.3 செமீ, திருக்குவளை – 9.6 செமீ, தலைஞாயிறு 9.9 செமீ (அதிகபட்சம்),வேதாரண்யம் 6.5 செமீ, கோடியக்கரை 6.0 செமீ.மொத்தமாக மாவட்டத்தில் 56.4 செமீ மழை பதிவாகி உள்ளது.

News November 24, 2025

BREAKING: நாகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 24, 2025

நாகை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 26ந் தேதி நேர்முக தேர்வு நடைபெற்றவுள்ளது. இத்தேர்வானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!