News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>லிங்கை<<>> கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News November 27, 2025

ராமநாதபுரம்: விவசாயி கொலை வழக்கில்.. 10 ஆண்டு சிறை

image

கடலாடி தாலுகா கண்ணன் புதுவன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 45. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 45.இவர்களுக்குள் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் 2022 மார்ச் 3ல் சத்தியமூர்த்தி சீமைக் கருவேல மரக்கட்டையால் சுப்பிரமணியனை அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பாலமுருகன் நேற்று சத்தியமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

News November 27, 2025

ராம்நாடு: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க

image

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 27, 2025

ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

image

ராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

error: Content is protected !!