News March 3, 2025
அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
Similar News
News December 9, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 9, 2025
மதுரை: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண் பலி

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சுமதி(54). நேற்று இவருக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்று, தண்ணீர் என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்துள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திலகர் திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.


