News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பியுங்கள். தபால் வேலையில் சேர விரும்பும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News December 4, 2025

மதுரை: 15 வயது சிறுமி கர்ப்பம்

image

கீரைத்துரையை சேர்ந்­த­வர் மலைச்­சாமி மகன் சேது­பதி(26). இவர் 15 வயது சிறுமியை ரக­சிய திரும­ணம் செய்து கொண்­டார். இதில் சிறுமி 7 மாத கர்ப்­ப­மா­னார். மதுரை குழந்­தை­கள் உதவி மைய மேற்­பார்­வை­யா­ளர் அனி­தா இது குறித்து போலீசில் புகார் செய்­தார். மகளிர் போலீ­சார் போக்சோ சட்­டத்தில் வழக்குப் பதிவு செய்து சேது­ப­தியை நேற்று கைது செய்தனர்.

News December 4, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை மாவட்டத்தில் நாளை (டிச.4) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பைக்ரா, பசுமலை, விளாச்சேரி மற்றும் திருநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலாஜி நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகர், அருள் நகர், நேதாஜி நகர், ராம்நகர், திருவள்ளுவர் நகர், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர், தண்டல்காரன்பட்டி, மூட்டா காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது SHARE IT.!

News December 3, 2025

மதுரை வெள்ளத்தின் நீங்கா நினைவுகள்..!

image

1993ம் ஆண்டு மதுரையில் ஒரே நாளில் 520 மி.மீ வரலாறு காணாத மழை கொட்டியது. செல்லூர் கண்மாய் இரவோடு இரவாக முன்னறிவிப்பின்றி உடைக்கப்பட்டு கோரிப்பாளையம், நரிமேடு, பீபீ குளம், தமுக்கம் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. வைகை நதியும் நிரம்பி வழிந்தது. டிச.1 முதல் 4 வரை ( இதே நாளில் ) மதுரை நகரம் ஸ்தம்பித்தது. மக்கள் உடைமைகளை இழந்து தவித்தனர். இன்றும் பலருக்கு இது நீங்கா வடுவாக மனதில் பதிந்துள்ளது.

error: Content is protected !!