News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.விருதுநகர் மாவட்டத்திற்கு 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> உடனே விண்ணப்பியுங்கள்.விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் 06.03.25-08.03.25.

Similar News

News November 16, 2025

விருதுநகர்: SIR தொடர்பாக தொலைபேசி எண் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விருதுநகரில் 4 மையங்களில் ஐடிஐ லெவல் தேர்வு

image

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி அடிப்படை தேர்வு நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் காலை 601 தேர்வர்கள், மதியம் 601 தேர்வர்கள் என 1202 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு கூட்டத்திற்கு ஹால் டிக்கெட் உடன் வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 15, 2025

சிவகாசியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

image

சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!