News April 6, 2025
அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 10 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 33 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இந்நிலையில் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News September 17, 2025
திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
News September 17, 2025
திருப்பூர்: டிகிரி போதும் ரூ.47000 சம்பளத்தில் அரசு வேலை!

திருப்பூர் மக்களே, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), துறையில் காலியாக Accounts Officer உள்ளிட்ட 213 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.47,600 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு Recruitment Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆக்.2 தேதிக்குள் இந்த லிங்கை<
News September 17, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு அடுத்த சேர்மன் கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா. இவரது இளைய மகன் படிப்பிற்காக வெளிநாடு செல்ல முடியாத காரணத்தால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த பிரமிளா நேற்று முன்தினம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு உயிரிழந்தார்.