News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
Similar News
News December 17, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், SSC, RRB, TNPSC, TNUSRB, போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மின்ட் ஐடிஐ-யில் வரும் ஜனவரியில் நடை பெற உள்ளது. இதில் சேர விரும்புவோர் https://forms.gle/QyWHC7dUAk9iYkFt5 கூகுள் படிவத்தில் தங்களது விவரத்தினை பூர்த்தி செய்யுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
BREAKING: செம்பரப்பக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாகம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஏரியை ஒட்டி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


