News April 6, 2025
அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!
Similar News
News August 11, 2025
திருச்சியில் மின்தடை அறிவிப்பு

திருச்சி மெயின்கார்ட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கரூர் பைபாஸ்ரோடு, சிந்தாமணி, ஓடத்துறை, சிங்காரத்தோப்பு, உறையூர் ஹவுசிங் யூனிட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News August 11, 2025
திருச்சி: உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறுங்க

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்ற உறுதிமொழியை எடுத்து https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledgeஇல் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.
News August 10, 2025
திருச்சியில் 896 வழக்குகள் பதிவு

திருச்சியில் நடப்பாண்டில் போதை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் (ம) கடத்துபவர்கள் மீது 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து 5005.6 கிலோ புகையிலை பொருட்களும்,12 இருசக்கர வாகனம், 8 நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு பதியப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.