News April 8, 2025
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
Similar News
News November 14, 2025
கோவை: மக்கள் வெளியே நடமாட வேண்டாம்!

கோயம்புத்தூர் அருகே உள்ள ஆனைமலை பாசிபைத்தான்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்தது. இதனால் மேலும் ஒரு கூண்டு நேற்று கொண்டு வரப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டது. எனினும் சிறுத்தை பிடிக்கும் வரை மாலை 6 மணிக்கு மேல் மக்கள் தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம். நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனே தகவல் தெரிவிக்க வனத்துறை அறிவித்துள்ளது.
News November 14, 2025
கோவை: மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்!

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார், மனைவி மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கடந்த (அக்.28) ஆம் தேதி கொலை செய்து தடாகம் போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமார் தான் கொலை செய்ய வைத்ததாக தெரிய வந்தது. பின் போலீசார் கவி சரவணகுமாரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 14, 2025
கோவை: திறம்பட செயல்பட்ட 51 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 51 காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். கூட்டத்தில், கோவை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.


