News April 8, 2025
அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். ஊதியம் ரூ.7700 – 24,200 வரை வழங்கப்படும். (SHARE பண்ணுங்க.)
Similar News
News September 15, 2025
கோவை அருகே ஆண் குழந்தை நரபலியா?

கோவை:இருகூர் – ராவத்துார் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் மற்றும் அந்த இடத்தில் மிளகாய் பொடி,கோழி ரத்தம் உள்ளிட்டவை சிதறி கிடந்தது. தகவல் அறிந்த சிங்காநல்லுார் போலீசார் குழந்தை உடலை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘குழந்தையை கொலை செய்து, அதை மறைக்க, கோழி ரத்தம், மிளகாய் பொடி உள்ளிட்டவற்றை துாவியிருக்கலாம்.நரபலியாகவும் இருக்கலாம் என விசாரணை நடக்கிறது’ என்றனர்.
News September 15, 2025
கோவை அருகே பரிதாபமாக பலி!

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் பிரபு (34). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை வருகிறார். இந்த நிலையில் நேற்று முந்தினம் கவுண்டம்பாளையம் பகுதியில் ஏசி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
கோவை: விழாவில் பங்கேற்க அழைப்பு

பெற்றோர்களை இழந்து உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு, ரூ.2000/- 18 வயது வரையிலான பள்ளி படிப்பை இடைநிற்றல் இன்றி தொடர உதவும், அன்பு கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) சென்னையில் துவக்கி வைக்கிறார். அதன் ஒருபகுதியாக கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில், கலெக்டர் பவன் குமார், எம்பி கணபதி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.