News April 8, 2025
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலரின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 4 பணியாளர், 29 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஏப்ரல்-23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News December 4, 2025
சிவகங்கை: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?..

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து உங்க மாவட்டத்திற்கு வீடுகள் உள்ளதா என்பதை செக் பண்ணுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 4, 2025
சிவகங்கை: கூடுதல் லாபம் எனக்கூறி இளைஞரிடம் மோசடி

சிங்கம்புனரியை சேர்ந்த 39 வயதான இளைஞரை, வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ஒருவர் தான் குறிப்பிடும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த இளைஞர் ரூ.64 ஆயிரம் பணத்தை 3 தவனைகளாக செலுத்தியுள்ளார். பின்னர் இளைஞர் பணத்தை பெற்ற நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டத்தை உனர்ந்து, சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News December 4, 2025
காரைக்குடி: பள்ளி மாணவன் தற்கொலை

காரைக்குடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் மணிகண்டன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர்கள் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


