News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு க்ளிக்<<>> செய்து அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்…

Similar News

News November 23, 2025

கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News November 23, 2025

BREAKING கடலூர்: மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலி

image

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராமத்தில் இன்று (நவ.23) மதியம் பெய்த கனமழையின் காரணமாக புளியமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததில், தங்களது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வனதாஸ், மரிய சூசை, பிளவ்மேரி ஆகியோர் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News November 23, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.,23) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 48 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 44 மில்லி மீட்டர், சிதம்பரம் 42 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 39.3 மில்லி மீட்டர், வடக்குத்து 32 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 31 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!