News April 23, 2025
அங்கன்வாடியில் அரசு வேலை

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர், 29 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இன்றைக்குள் (ஏப்.23) இந்த <
Similar News
News November 26, 2025
தஞ்சை: பினாயில் ஊற்றி 18 கிலோ மீன்கள் அழிப்பு

கும்பகோணம் மாநகரில் உள்ள தந்தை பெரியார் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மீன்வள மேற்பார்வையாளர்கள் கிளைடஸ், சங்கரன், பரணிதரன் அடங்கிய குழுவினரால் மேற்படி மீன் மார்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது கெட்டுப்போன மற்றும் சிதலமடைந்த சுமார் 18 கிலோ அளவிலான மீன்கள் கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
News November 26, 2025
தஞ்சை: அரசு வேலைவாய்ப்பு பெற இலவச பயிற்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். மேலும் சுகாதார ஆய்வாளர் பணிக்கு தயாராகும் மாணவர்களும் இதில் பங்கேற்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News November 26, 2025
JUST IN தஞ்சை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


