News October 25, 2024

அக்.29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் அக்.29 காலை 11 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.32,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

ராணிப்பேட்டையில் ஆற்றில் விழுந்து பலி!

image

ராணிப்பேட்டை: மாங்காட்டுசேரி, அருந்ததி பாளையத்தைச் சேர்ந்தவர் குப்பன்(80). இவர் கடந்த டிச.4ஆம் தேதி வீட்டை விட்டு காணாமல் போனார். இந்நிலையில், அவரது உறவினர்கள் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்து தேடி வந்தனர். இன்று(டிச.14) எஸ்.என் கண்டிகை ஆற்றில் முதியவர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . போலீசார் அங்கு சென்று விசாரித்ததில் இறந்து கிடந்தது குப்பன் என்பது தெரியவந்தது.

News December 15, 2025

ராணிப்பேட்டை: வாலிபர் துடிதுடித்து பலி!

image

நெல்வாய் கிராமம், சின்ன தென்னலையைச் சேர்ந்தவர் சரவணன். இவர், நேற்று)டிச. 14) அசநெல்லிகுப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார் அப்போது டிராக்டரில் சிக்கி படுகாயமடைந்தார் .அருகில் இருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!