News October 23, 2024
அக்.25இல் உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 25ஆம் தேதி காலை 10 மணிக்கு உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள அனைவரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் தொடர்பு கொண்டு, வருகிற 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
Similar News
News August 11, 2025
நாமக்கல்லில் முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.10) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.82-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
News August 11, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை!

நாமக்கல் மாவட்டத்தில் ஆனங்கூர், தோக்கவாடி, கல்வி நகர், குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.12), மல்லசமுத்திரம், கவுண்டம்பாளையம், பாலமேடு, மங்களம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வேப்பநத்தம், கொசவம்பட்டி, முதலைப்பட்டி, முத்துகாப்பட்டி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஆக.13 என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE)
News August 11, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கான முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 10) மாலை நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.4.75 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.