News June 28, 2024
அக்னிவீர் வாயு ஏர்மேன் ஆட்சேர்ப்பு

2024 – 2025ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண், வேலை நாடுபவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்கள் அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும் என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
பெரம்பலூர்: திமுக சார்பில் ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று திமுக சார்பில் ஆய்வு கூட்டம் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
News November 24, 2025
பெரம்பலூர்: தேர்வு கிடையாது… ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 1785
3. வயது: 24க்குள் (SC/ST-29,OBC-27)
4. சம்பளம்: ரூ.29,200
5. கல்வித் தகுதி: 12th, ITI
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News November 24, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

பெரம்பலூர், அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, இன்று இலவச மிதிவண்டியை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் கழக பொறுப்பாளர் வி. ஜெகதீசன் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.


