News September 13, 2024
அகில இந்திய தொழில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழில் பயிற்சி குடும்பத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Similar News
News November 14, 2025
சிவகாசியில் இலவச கண் பரிசோதனை முகாம்

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைகள் இணைந்து சிவகாசி அருகே விஸ்வநத்தம் மதி சுகாதார மைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். இந்த முகாமினை பாமக மாநில பொருளாளர் திலகபாமா துவக்கி வைத்தார். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். SHARE
News November 14, 2025
விருதுநகர் MedPlus மருந்தகத்தில் வேலை

விருதுநகரில் உள்ள MedPlus மருந்தகத்தில் Pharmacy assistant பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் தேவை.
மாத ஊதியமாக ரூ.16,000 முதல் ரூ.20,000 வரை வழஙக்கப்படும். முன்அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 10th, 12th, எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 25ம் தேதிக்குள் <
News November 14, 2025
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்

சிவகாசியில் வரும் 2026 தீபாவளி பண்டிகைக்காண பட்டாசு உற்பத்தி பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் துவக்கத்திலிருந்தே அவ்வப்போது பெய்து மழை மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க போதிய வெப்பநிலையின்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டாசு தட்டுப்பாட்டை போக்க முன்கூட்டியே உற்பத்தியை துவங்கிய உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


