News December 4, 2024

அகழாய்வில் தென்பட்ட செங்கல் கட்டுமான சுவர்

image

வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 2500 க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோண்டப்பட்டு வரும் அகழாய்வு குழியில் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டுள்ளது. இவை குடியிருப்பு அல்லது தொழில் கூட கட்டுமானமாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 14, 2025

சிவகாசி: முத்தம் கொடுத்து மிரட்டியவர் கைது

image

சிவகாசி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமனமாகி மனைவி உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியை ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதை படம் எடுத்து மிரட்டி வருவதாக மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

News December 14, 2025

விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக் <<>>செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News December 14, 2025

விருதுநகர்: ரயில் மோதி வாலிபர் பலி

image

விருதுநகர்-துலுக்கப்பட்டி ரயில்நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (36) என் தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார் என விசாரணையில் கூறப்படுகிறது.

error: Content is protected !!