News December 5, 2024
ஃபெங்கல் புயல்: தூத்துக்குடி மாநகராட்சி நிவாரண உதவி

தமிழகத்தில் ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் பணமாகவும், பொருளாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாரி மூலம் நிவாரண பொருட்கள் நேற்று(டிசம்பர் 4) அனுப்பி வைக்கப்பட்டது. மேயர் ஜெகன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Similar News
News November 24, 2025
தூத்துக்குடி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 24, 2025
தூத்துக்குடி: மாடு முட்டி தொழிலாளி பலி

தூத்துக்குடி கே வி கே நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (43). இவர் ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கடைக்கு வேனில் இருந்து இவர் மாடுகளை இறக்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு மாடு இவரது வயிற்றில் முட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது பற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
News November 24, 2025
தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


