News August 20, 2024
மூன்று கட்சித் தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

பிரேமலதா விஜயகாந்த், செல்வப்பெருந்தகை, தமிழிசை ஆகியோரின் வீட்டிற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் வீட்டிற்கும், ஆளுநராக இருந்த தமிழிசை வீட்டிற்கும், அச்சுறுத்தல் காரணமாக செல்வபெருந்தகை வீட்டிற்கும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதனை அரசு திடீரென்று வாபஸ் பெற்றுள்ளது.
Similar News
News January 13, 2026
2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.
News January 13, 2026
தமிழ்நாட்டில் பொங்கல்.. பிற மாநிலங்களில் என்ன பெயர்?

இந்தியாவில், சூரியன் மகர ராசிக்குள் நுழைவதையும், அறுவடை திருநாளையும் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் கொண்டாடுகின்றனர். இது, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களிலும், மரபுகளிலும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?


