News January 14, 2025
ரஞ்சி டிராபியில் மீண்டும் களமிறங்கும் விராட் கோலி?

2025ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பிடித்துள்ளது. முதல்தரப் போட்டியில் விராட் கோலி களமிறங்கலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக அவர் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக 2012 ஆம் ஆண்டு பங்கேற்றார். ஜன.,23இல் தொடங்கும் ரஞ்சி டிராபி தொடர் மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறும்.
Similar News
News December 8, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்மையை சொல் அது உனது மரியாதையை பாதுகாக்கும். *சோதனைகள் தான் ஒரு மனிதனுக்கு அவனை அறிமுகப்படுத்துகின்றன. *ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது. அந்த இடத்தில் ஒளி 2 மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால், நாம் பெறும் இன்பம் 2 மடங்காகும். *உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதில் பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்.
News December 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 543 ▶குறள்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். ▶பொருள்: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
News December 8, 2025
ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், ‘நுஸுக்’ அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அட்டை வடிவிலும் வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும் யாத்ரீகர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


