News August 18, 2025
யானையும் டிராகனும் ஒன்றிணையுமா?

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுபற்றி பேசிய EAM ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம், தகராறாக மாறக் கூடாது என்றார். மேலும், நாம் விரும்புவது நியாயமான, பலதுருவ உலக ஒழுங்கை தான் (பலதுருவ ஆசியா உள்பட). உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர இது அவசியமாகும் என்றும், இந்த சந்திப்பு பரஸ்பரம் பலன் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
BCCI கூட்டத்தில் RO – KO குறித்து ஆலோசனை

ரோஹித், கோலியின் ஒப்பந்தங்களை திருத்துவது பற்றி வரும் 22-ம் தேதி நடைபெறும் BCCI பொதுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான சம்பளம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜடேஜா, பும்ராவுக்கு நிகராக சுப்மன் கில் A+ பிரிவில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வானதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
News December 11, 2025
ரூமி பொன்மொழிகள்

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
News December 11, 2025
நீதிபதி சுவாமிநாதனுக்கு Z பாதுகாப்பு வழங்குக: கஸ்தூரி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனை, தேசவிரோத சக்திகள் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாக கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள இந்து, முஸ்லிம்களே ஒன்றும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


